நேரு நேருதான்; அவரது தியாகங்களை மறக்க முடியாது!

சரத் பவார் பேச்சு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று (10.06.2026) நடைபெற்றது.

இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்திருப்பது குறித்து சரத் பவார் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி மிக நீண்ட காலம் பிரதமராக பதவிவகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரைப் போன்ற ஒரு தலைவர் இல்லை என்ற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில், பிரதமர் என்பது ஒரு அரசியலமைப்பு பதவி. அந்த பதவியை நாம் மதிக்க வேண்டும்.

ஆனால், நேரு நேருதான், இந்தியர்கள் அவருடைய தியாகங்களை மறக்க முடியாது.

தேச கட்டுமானத்திற்கும், சுதந்திரப் போராட்டத்தின்போது பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததன் மூலமும் நேரு ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது. அந்த பங்களிப்பு மதிக்கப்பட வேண்டும்.

நேருவை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறினார்.

– வைஷ்ணவி பாலு

You might also like