தொலைந்துபோன அபூர்வ பிரதிகள்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு: 14 ‘அற்புதம்’ என்ற சொல்லுக்கான அர்த்தமாகத்தான் என்னுடைய ஊடக வாழ்க்கையில், கிடைத்த அந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இணைய ஊடகம் இவற்றில் பணியாற்றிய 45 ஆண்டு காலங்களுக்கு மேல் இன்னமும் பணியாற்றிக் கொண்டிருக்கிற நிலையில், கீழே நான் விவரித்திருக்கும் இந்த அனுபவங்கள், கொஞ்சம் அபூர்வமான ரகம்தான். இத்தனை ஆண்டுகள் ஊடக அனுபவத்தில் சில ஆயிரக்கணக்கான மனிதர்களைச் சந்தித்திருந்தாலும், சிலருடைய சந்திப்புகள் தனித்து நினைவில் சிறு […]

இறுதிக்கட்ட தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: வழக்கத்தைவிட வெப்பத்தின் சூடு அதிகரித்திருப்பதைப் போலவே, பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தனிப்பட்ட வசைகள் முன்பிருந்ததைவிட வாக்காளர்கள் கவலைப்படும் அளவிற்கு விழுந்திருக்கின்றன. மைக்கிற்கு முன்னால் சொற்களாலேயே பரஸ்பரம் பிராண்டுவது நடக்கிறது.  அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி திமுகவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஸ்டாலின் குடும்பத்தைப் பற்றி கடுமையாகப் பேச, பதிலுக்கு முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இன்னும் சில திமுக தலைவர்களும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அனல் பறக்கும் […]

தீண்டாமை ஒழிந்திருக்கிறதா?

 கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 13 சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கும். இப்போதிருக்கிற ‘ஜென்சி கிட்ஸ்கள்’ நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கும். ஆனால், இதே தமிழகத்தில் என்னுடைய 45 ஆண்டுகால ஊடக வாழ்க்கையில் சந்தித்த சில நிகழ்வுகள் மட்டும் இங்கே. தென் தமிழகத்தில் வறட்சி பரவின ஒரு சிறு நகரம். அங்கு இயல்பாக நடக்கும் தீண்டாமைக் கொடுமை எந்த அளவில் தீவிரப்பட்டிருக்கிறது என்பதை நேரடியாக வந்து பாருங்கள் என்று நண்பர் ஒருவர் […]

கவிஞர் கண்ணதாசனின் ‘பசுமை நிறைந்த நினைவுகள்’!

“எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்.. நான் வாழ யார் பாடுவார்?’’   – கவியரசர் கண்ணதாசன்   1998-ம் ஆண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கிற கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டி கிராமத்துக்கு அழைத்துச் சென்ற – மதுரை நண்பர், கவிஞர் கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவரான ஆர்.சொக்கலிங்கத்திற்கும், பிரபல ஜோதிடர் சிவல்புரி சிங்காரத்திற்கும் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.   அப்போது குமுதத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.   ஊருக்குள் அவர்களோடு நுழைந்ததும் […]

நினைவை விட்டு அகலாத அந்தச் சிறுமிகள்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 12 எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்கிற சொற்றொடர் சர்வதேச அளவில் அண்மையில் கவனிக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். அதில் இளம் சிறுமிகள், சிறுவர்கள் கொடுமையான பாலியல் சித்ரவதைகளுக்கு உட்பட்ட நிலையில், அதை ரகசியமாகக் கொண்டாடியவர்களாக பல சர்வதேசத் தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு, அவையும் விவாதப்பொருளாக மாறியிருக்கின்றன. ஒருவரின் அனுமதி பெறாமல் அவரைத் தொடுவது என்பது எத்தகைய அத்துமீறல் என்பது, போக்சோ சட்டத்தைப் பற்றி தெரியாதவர்கள் கூட உணர […]

காட்டிலிருந்து ஒருவன்…!

பெரு முயற்சி எடுத்து ஒரு ஊடகவியலாளனாக நானும் பாஷா போன்ற சக நண்பர்களும் அன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனநாயகரீதியான என்ன பலன் கிடைத்தது.