அளவுக்கு மீறிக் கொள்ளாதே!
அரசர் நாட்டு மக்கள் செல்வமெல்லாம் குறையும் வண்ணமோ அழியும் வண்ணமோ அவர்களிடமிருந்து வரித் தொகைகளைப் பெறமாட்டார்.
சமூகநீதியை நிலைநாட்டுமா சாதிவாரிக் கணக்கெடுப்பு?
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் குறித்து வரலாற்றுத் தரவுகளுடன் ஆவணப்படுத்தியுளளார் ஆனந்த் டெல்டும்டே. பேராசிரியரும் மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் என்ன எனக் கேள்வியெழுப்புகிறார். இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே இந்தக் கணக்கெடுப்பு பயன்படுகிறதா, ‘சமூக நீதி’ என்கிற போர்வையால் சாதிகளின் இருப்பு உறுதி செய்யப்படுகிறதா என்பதையும் இந்நூலில் இவர் ஆராய்கிறார். இந்தியாவில் சாதிகள் எப்படிப் புகுத்தப்பட்டுக் காலந்தோறும் […]
நேரு – குழந்தைகளுடன் குழந்தையாக…!
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக […]
திரையெல்லாம் செண்பகப் பூ!
நூல் அறிமுகம்: இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அதிலும் பெண்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் தருவது திரைப்படங்கள். 1980-90களில் வெளியான திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரங்களாகவே தங்களைக் கருதிக்கொண்டிருந்தனர் வெகுமக்கள். அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழ்ந்தன தமிழ்த் திரைப்படங்கள். காதல், உறவுகளின் பாசம் – உரசல்கள், பக்தி… என எல்லா ரசனைகளின் கலவையாக வெளிவந்த திரைப்படங்கள் மக்களைக் கவர்ந்ததில் வியப்பதற்கில்லை. […]
கலைவாணரின் குணத்திற்கு கொஞ்சமும் குறையாதவர் மதுரம்!
தமிழ்த் திரையின் சிரிப்பு ஜோடி என்.எஸ்.கிருஷ்ணன் & மதுரம். இந்தக் காதல் தம்பதியரின் வாழ்க்கையைத் தொடாமல் தமிழகத்தின் அரசியலையும், வரலாற்றையும் யாரும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இவர்களது பெருமையைச் சொல்லும். எல்லா ஆண்களின் வெற்றிகளுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படி கலைவாணர் என்ற கலைமேதை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் திரையிலும் நிஜத்திலும் பின்னால் இருந்தவர் டி.ஏ மதுரம். சம்பாதித்ததையெல்லாம் மக்களுக்குக் கொடுத்து வாழ்ந்த அந்த கலைமேதைக்கு எல்லாமுமமாக இருந்தவர் டி.ஏ. […]
என் எழுத்திற்கு அப்பா தந்த அங்கீகாரம்!
‘உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணீர்’ என்கிற நாவலை எழுதிய என்னுடைய தாயார் மணிமேகலை, தந்தை தமிழ்வாணன் அவர்களை தமிழ் படிக்கிற எல்லோரும் அறிவார்கள். அப்படி எழுத்துக்கு மரியாதை சேர்த்த அவர்களுக்கு மகனாகப் பிறந்த எனக்குள்ளும் எழுத்தின் ஊற்றுக்கண்கள் இருந்தது ஆச்சரியமில்லை. இருந்தாலும் எழுத்துத் துறைக்கு நான் அறியாமலே வந்து விழுந்தவன். எழுத்தைத் துணையாகக் கொண்டு எழுத்துலகில் நுழைந்தவன் நான். அந்தக் காலத்தில் தமிழ் இலக்கிய மாணவர்கள் என்றால் மற்ற பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு நாங்கள் ஒரு கேலிப்பொருளாக […]





