யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!

திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம் “சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும். நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு புலன்களையும் வலுப்படுத்த தனித்தனி ஆசனங்கள் இருக்கு. எல்லா ஆசனங்களும் எனக்கு அத்துப்படி!” கோவை மாவட்டம், சூலூருக்கு பக்கத்துல உள்ள காசிகவுண்டன் புதூர்தான் நான் பொறந்த ஊர். கூகுள் மேப்ல தேடினாகூட கண்டுபிடிக்க முடியாத சின்ன கிராமம் […]

இன்றைய தக்காளி எப்படி? ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்!

அன்றும் இன்றும் என்றுமே தக்காளி சேர்க்காத சமையல் என்பதே அபூர்வம். ஆனால் இன்றைய தக்காளி எப்படியிருக்கிறது? என்று சுவையாக எழுதியுள்ளார் பத்திரிகையாளர் செ. இளங்கோவன். நான் சிறுவனாக இருந்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் கிராமத் தோட்டங்களில் விளைந்த தக்காளியின் சுவையே அலாதி. இன்றுபோல் அன்றைய தக்காளிகளெல்லாம் ஏதோ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதுபோல் ஒரே அளவில் அழகாக இருந்ததில்லை. அன்றைய தக்காளிகளெல்லாம் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு தினுசாகத்தான் இருந்தன. தக்காளிச் செடி என்று சொன்னாலும் கொடியாகத்தான் தரையில் […]

சென்னைக்கு வருபவர்களின் முதல் நாள் பொழுது!

நூல் விமர்சனம்: சென்னைக்கு ஒரு உளவியல் உண்டு. முதன்முதலாக சென்னைக்கு வருபவர்களின் இரவுப்பொழுது அச்சம், ஏமாற்றம், வியப்பு, மிரட்சி கலந்த ஓர் உணர்வுடன்தான் கழியும். அந்த அனுபவத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னையே வேண்டாம் என்று தலைதெரிக்க ஓடிப்போனவர்கள் பலர். தன்னை நாடி வருபவர்களுக்கு, தன்னைத் தகவமைத்துக்கொள்கிற தைரியமும் நம்பிக்கையும் இருக்கிறதா என்று சென்னை மாநகரம் வைக்கிற தகுதித்தேர்வுதான் முதல்நாள் இரவுப்பொழுதைக் கழிக்கிற அனுபவம். சென்னைக்கு வருபவர்கள், முதல்நாள் இரவுப்பொழுதைக் கழிக்கும் இடமே இங்கு அவர்களுக்கான முதல் முகவரி. […]

பேச்சாளர்களைக் காப்பாத்துங்கப்பா…!

நூல் அறிமுக விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள் மாலை வானத்தின் ஈசானிமூலையில் கருந்திரளாக மேகம் திரண்டிருந்தது. மழை மெல்லிய தூறலாக தொடங்கியிருந்தது. டிஸ்கவரி புக் பேலஸ் ‘பிரபஞ்சன் அரங்கில்’ நண்பர் ஏக்நாத் எழுதிய அவயம் நாவலின் அறிமுகக் கூட்டம். கவிதாபாரதி, வேடியப்பன் இருவரின் பேரன்பால் அது விழைந்திருந்தது. சிறப்பு விருந்தினர்களில் இருவருக்கு நூல் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் சிறு குழப்பம். வாழ்த்துரைக்காக வந்த கவிஞர் யுகபாரதி, ஒரே நாளில் நாவலை படித்துவிட்டு மிகச் சுவையாகப் பேசினார். சமகாலத்தில் வெளியான […]

சென்னையும் பிடிக்கும், சென்னைத் தமிழும் பிடிக்கும்!

– நாசரின் சென்னை அனுபவங்கள்: சென்னையைப் பற்றிய என் நினைவுகள் 12 வயதிலிருந்தே தொடங்குகின்றன. 70-களில் முதன்முதலாக நான் சென்னைக்கு வந்தேன். எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும். ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று சுபா(ங்) மேரே ஸாத் மதராஸ்கு ஆத்தா க்யாரே நாளைக்கு என்னுடன் மெட்ராஸக்கு வரயாடா என்று கேட்டார். எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் இருந்த செங்கல்பட்டிலிருந்து சென்னை வெறும் 60 கிலோ மீட்டர்தான் என்றாலும் அப்போதெல்லா சென்னைக்கும் போவது என்பது […]

‘கால்மேல்கல் கல்லலாகாது’ கல்வெட்டு கூறும் நீதி!

– சு.வெங்கடேசன் எம்.பி. 40 ஆண்டுகளுக்கு முன் பெரியாறு பாசன வாய்க்கால் முழுவதும் சிமெண்ட் தளங்கள் போடப்பட்டன. அது உலக வங்கி நிதியிலிருந்து செய்யப்பட்ட வேலை. இந்த பணியைத்தான் செய்ய வேண்டும், அதற்குத்தான் கடன் என்று உலக வங்கி கொடுத்த கடனை வாங்கி எந்தவித ஆய்வும், அறிவும் இல்லாமல் நமது அரசாங்கங்கள் செய்து முடித்த வேலையிது. உலக வங்கியின் உத்தரவின் பின்னணியில் சிமெண்ட் கம்பெனிகளின் நலனே அடிப்படையாக இருந்தது. யாராவது நீர் வழிப்பாதையில் சிமெண்ட் தளங்கள் அமைப்பார்களா? […]