என் மீது எப்படி வழக்கு வர முடியும்?

பரண் :  கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்படப் பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’ பதில் : “எப்படி வரமுடியும்? நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சொத்து வந்த வழியைக் காட்ட முடியாமல் ஏதாவது சொத்து சேர்த்திருக்கிறோமா? என்னுடைய வருமான வரிக் கணக்குகள் ஒழுங்காக இருக்கின்றன. முறையாக வருமான வரி கட்டி வந்திருக்கிறேன். நான் எவ்வளவு […]

மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு!

பரண்: ஜனங்களே! நீங்கள் தான் இந்தப் பூமிக்கு சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வேலை செய்யும் தொழும்பர்கள். ஒரு அரசாட்சியார் சரியானபடி வேலைபார்க்காவிட்டால் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு. உங்களுடைய சுதந்திரங்களையும் உரிமைகளையும் அறிந்து கொண்டு சட்டத்திற்கிணங்கிய காரியங்களிலே தலையிடுவோர்களை சிறிதேனும் தாட்சண்யமின்றி எவ்விதங்களாலும் அடக்கி விடுங்கள். மனத் துணிவுடையவர்களிடம் போலீஸாரின் குறும்பு செல்லமாட்டாது. மனத்துணிவுடையவர்களை பிசாசுகூட அணுகாது. – 1907 மே மாதம் 4-ம் தேதியன்று பாரதியார் எழுதியது.

“வாங்க சேர்ந்து குளிப்போம்”- காமராஜர்!

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி விசித்திரமாக இருந்தது. குளித்தும் குளிக்காமலும் இருந்த பொதுமக்கள் அருவிக்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தனர். ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்ததும் விஷயம் விளங்கிற்று அவருக்கு. அங்கிருந்த காவலரை பார்த்து, இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி வந்தியா!. இவங்களோட […]

வாசன் – சலியாத உழைப்பு!

பரண் :  ‘’திரு.வாசன் வாரப்பத்திரிகைகளும் சரி, தமிழ் சினிமா உலகமும் சரி, காலம் சென்ற வாசன் அவர்களை நன்றியோடு நினையாமல் இருக்க முடியாது. இரு துறைகளிலும் அவர் ஒரு முன்னோடி. வழிகாட்டி. கட்டுக்கடங்காத உற்சாகம்; அந்த உற்சாகத்தைச் சாதனையாக உருவாக்கத் தெரிந்த ஆற்றல்; புத்திக்கூர்மையுடன் திட்டம் வகுத்துச் செயலாற்றினால் எந்தத் துறையிலும் உச்சிக்கு ஏறிவிட முடியும் என்ற உரம்; உரத்துக்குத் துணை நின்ற சலியாத உழைப்பு. ‘வாசன்’ என்கிற வார்த்தையில் இவை எல்லாம் அடங்கியிருந்தன. வாழ்க அவர் […]

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்: கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு (கவலைகள்…) நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் யாரையும் எதுவும் சுடவில்லை என்னையும் பழியோ விடவில்லை சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ தொட்டதும் மலர்களின் மணம் போமோ கற்றவன் கலங்குதல் அழகாமோ சட்டமும் கற்பனைக் கதையாமோ (கவலைகள்…) நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி நான்கு விரல்கடை தூர வழி சொல்லுக்கும் செயலுக்கும் […]

சினிமாவைப் பற்றி இழிவாகப் பேசுவது ஃபேஷனாகிவிட்டது!

பரண்: ”சினிமாத் தொழிலைப் பற்றியும், அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றியும், இழிவாகக் கருதுவதும், இழிவாகப் பேசுவதும் ‘பாஷனாக’ப் போய் விட்டது. எந்தப் படத்தைப் பார்த்தாலும், அதில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பதே வழக்கமாகி வருகிறது”- – ஜெமினி ஸ்டூடியோ அதிபரான எஸ்.எஸ். வாசன் (பேசும்படம் இதழில்)