போதைப் பொருட்கள் புழக்கம் – பிரதமர் எச்சரிக்கை!

செய்தி:    போதைப் பொருட்கள் வாழ்க்கையைச் சீரழித்துவிடும்!- – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை. கோவிந்த் கமெண்ட்:  போதைப் பொருட்களை உபயோகப்படுத்தினால் ஏற்படும் விளைவை, நன்றாக உணர்ந்துதான் பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அதே சமயம், இந்தியாவிற்குள்  எந்தெந்த மாநிலங்கள் வழியாக குறிப்பாக, சில துறைமுகங்கள் வழியாக போதைப் பொருட்கள் வந்து இறங்குவது குறித்தும் இதேவிதமான எச்சரிக்கை உணர்வுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

சமஸ்கிருதத்திற்கு தரும் முன்னுரிமை ஏன் தமிழுக்கில்லை?

செய்தி:    நாடு முழுவதும் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகளில், 24000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ​​​7 கோடி பேசும் தமிழைக் கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கோவிந்த் கமெண்ட்:  மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுப்பியிருக்கும் கேள்வி மிகவும் நியாயமானதுதான். பொதுமக்களால் அதிகம் பேசப்படாத மொழியாகவும் கருவறை மொழியாகவுமே இருக்கிற சமஸ்கிருதத்திற்கு கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது, […]

உச்சநீதிமன்ற உத்தரவில் வயது சார்ந்த பாரபட்சம் ஏன்?

செய்தி:    தேர்வு முறைகேடு போராட்டத்தில் கைதான 18 வயதுக்குட்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்! – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. கோவிந்த் கமெண்ட்:  கல்வி நலனை மையப்படுத்தி நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை எந்த வழக்கும் பதியாமல் விடுதலை செய்யவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறபோது, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் வயது சார்ந்த பாரபட்சம் ஏன்?       

மேகதாது பிரச்சனை : தொடர்ந்து வலுக்கும் சர்ச்சைகள்!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பாஜக ஆட்சியாக இருந்தாலும் சரி, இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க முடியாமல், ஏதோ ஒரு தடையை மத்திய அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதே நீர் மேலாண்மை சார்ந்த வரலாறாக உள்ளது.

போராட்டத்திற்கான முதல் வெற்றியும்; சில எதிர்வினைகளும்!

டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் மொழி, மாநிலப் பாகுபாடுகளைக் கடந்து இந்தியா முழுக்க மாணவர்கள் எழுச்சியுடன் பல நாட்களாகத் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் பலனாக, தற்போது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தன் பதவியை விட்டு விலகி இருக்கிறார். அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார். அவர் பதவி விலகியதை அடுத்து இந்தியா முழுக்கப் போராடி வந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்து குதூகலமாக தங்களது முதல் வெற்றியாக அந்த பதவி விலகளைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆனாலும் இதைத் […]

டெல்லியில் நீடிக்கும் போராட்டம்; யார் செவி சாய்ப்பது?

டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பும், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தின்போது, அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீதும், இளம்பெண்கள் மீதும் காவல்துறையினர் நடத்தியிருக்கும் தாக்குதல்களை சமூக வலைத்தளங்களின் வழியே பார்க்கும்போது பலரும் பதற வேண்டி இருக்கிறது. வித்தியாசமான லத்திகளால் அந்த இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள். இளம்பெண்கள் மீது கடுமையான வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. அதில் கலந்து கொண்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களோ, சிறுமிகளோ கூட அந்தத் தாக்குதலுக்கு தப்பவில்லை. இதற்கு முந்திய […]