கல்வியும் இயற்கை அழகும் இணைந்த மலை மாநிலம்!
இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா நீண்ட காலமாக அறியப்பட்டது. ஆனால், சமீபத்திய ULLAS திட்டத்தின் அடிப்படையில் மிசோரம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலம் இன்று நாட்டிலேயே அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. இயற்கையும், கல்வி சாதனையும் ஒன்றாக இணைந்த இந்த மாநிலத்தின் கதை மிகவும் சுவாரசியமானது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிசோரத்தின் பெரும்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. உயரமான மலைகள், அழகான பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கை எழில் […]
வாட்ஸ்அப்பின் சிஇஓவாக ஓர் இந்தியர்!
வாட்ஸ்அப்பின் புதிய சி.இ.ஓ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த குணால் ஷா. வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் சிஇஓக்களாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பும் ஓர் இந்தியரை சிஇஓவாக ஆக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், பொதுவாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பொறியியல் பட்டதாரிகளாகவோ அல்லது மேலாண்மை படித்தவர்களாகவோ இருப்பார்கள். ஆனால், குணால் ஷா இதுபோன்ற எந்தப் பின்னணியிலிருந்தும் வரவில்லை என்பது கூடுதல் ஆச்சரியத்தைத் […]
ஒலிம்பிக் போட்டிகள் கடந்துவந்த பாதை!
ஜூன் 23 – சர்வதேச ஒலிம்பிக் தினம். 1894 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தோற்றுவிக்கப்பட்டது.
ஏஐ தொழில்நுட்பம்: யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு?
நவீனத் தொழில்நுட்பம் என்பது அறிவியல் யுகத்தில் அத்தியாவசியமான ஒன்று. புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அதுவரை கட்டிக் காட்கப்பட்ட பழைய தொழில்நுட்பங்கள் பின்னுக்குப் போய்விடுகின்றன. உதாரணத்திற்கு சென்ற நூற்றாண்டில் விவசாயத்தின் முன்னணி தொழில்நுட்பமாக திகழ்கிற டிராக்டர் பயன்பாட்டிற்கு வந்தபோது, தமிழகத்தில், குறிப்பாக தஞ்சையைச் சேர்ந்த ஏர் ஓட்டிக் கொண்டிருந்த விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாளடைவில் ஏர் ஓட்டும் உழவர்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள். அதைப்போலவே 80-களின் துவக்கத்தில் நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவான கம்யூட்டர் அறிமுகப்படுத்தபட்டபோது, வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த […]
நீர்வழிப் பாதையைத் திறந்துவிட்ட ஈரான்!
செய்தி: 8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்! கோவிந்த் கமெண்ட்: ஒரு வழியாக அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்துவந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது. ஈரான் இதுவரை அடைத்து வைத்திருந்த ஹார்முஸ் ஜலசந்தி பாதையும் திறந்துவிடப்பட்டு இந்திய எண்ணெய்க் கப்பல்கள் சிறிதுகால இடைவெளிக்குப் பிறகு சிக்கல்கள் இல்லாமல் வரமுடிந்திருக்கிறது. இவ்வளவெல்லாம் நடந்தும் இங்குள்ள பெட்ரோல், டீசல் விலை கொஞ்சமாவது குறையுமா? […]
தவெக கூட்டணியில் தான் நீடிப்போம்!
செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதும், செமையான கொந்தளிப்பு ஏற்பட்டது காதர் மொகிதீனிடமிருந்து. கேள்வி இதுதான், “இஸ்லாமியர்களின் 5 கடமைகளுக்கு மேலாக 6-வது கடமையாக திமுக நாம் வாக்களிக்க வேண்டும்” என்று முன்பு ஒரு கூட்டத்தில் சொல்லியிருந்தீர்களே?” இதற்குத்தான் கொந்தளித்த பதில். “பொய் சொல்லாதீங்க, பொய்யைக் கேள்வியாய் கேட்காதீங்க. அப்போது நாங்கள் இருந்த கூட்டணிக்கு வாக்களிக்கச் சொன்னேனே ஒழிய, திமுக கூட்டணிக்கு என்றெல்லாம் நான் சொல்லவில்லை” […]





