முதுமையிலும் விடாமுயற்சி!

செய்தி:

உத்தரப்பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​த முதியவர் அசோக் பாஹர் தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழு​தி​யுள்​ளார்.

கோவிந்த் கமெண்ட்:

நீட் தேர்வு முறை அமலானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் இங்கு அலையடித்துக் கொண்டிருக்கின்றன.

தேர்வு எழுத ஹாலுக்குள் வந்த மாணவர்களை மோப்பம் பிடித்து சோதிப்பதிலிருந்து பல்வேறு விஷயங்கள் சர்ச்சைக்குரிய செய்திகளாகி இருக்கின்றன.

இந்த நிலையில், 71 வயதான முதியவர் நீட் தேர்வு எழுத முன் வந்திருக்கிறார் என்பது, அவருடைய முதுமையை மீறிய உற்சாகத்தைக் காட்டுகிறது.

#உத்தரபிரதேசம் #லக்னோ #நீட்தேர்வு #NEETExam #elderman #neetexam #dream #doctor #முதுமை #நீட் #முதியவர் #அசோக்பாஹர் #neet #ashokbahar

You might also like