மகளிர் ஐபிஎல்: முதன்முறையாக சாம்பியனான பெங்களூரு!

மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நேற்று நேற்றிரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங், பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதனால் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 18.3 ஓவர்கள் முடிவில் 113 ரன்கள் எடுத்தன.

இதையடுத்து 114 ரன்கள் இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும், சோபி டேவினும் களமிறங்கினர்.

ஆட்டத்தின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இதனிடையே, சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு, விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

You might also like