ஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷிகர் தவான் 30 ரன்களும், மேத்யூ ஷார்ட் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களைக் குவித்தது. லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 82 ரன்களும், ஜிதேஷ் சர்மா 27 பந்தில் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அசத்தினார்.

தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும், கேரமரன் கிரீன் 23 ரன்களும் எடுத்தனர். திம் டேவிட் 19 ரன்களுடனும், திலக் வர்மா 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடினர். ஆட்டத்தின் முடிவில் 18.5 ஓவரில் 216 ரன்கள் எடுத்து மும்பை அணி ஆட்டத்தை கைப்பற்றியது.

You might also like