நூல் அறிமுகம்:
நூலாசிரியர் மருத்துவர் க.திருத்தணிகாசலம் ‘நோய்களும் இயற்கை மருத்துவமும்’, ‘எளிய பச்சிலை மருத்துவம்’, ‘நோய்களை நீக்கும் காய்கறிகள்’ உள்ளிட்ட பத்து மருத்துவ நூல்களை எழுதியவர்.
இயற்கை வழங்கியுள்ள செடி, கொடி, மரங்களின் இலைகள் மகத்தான மருத்துவ குணம் கொண்டவை.
இலைகள் எப்படி மருந்தாக பயன்படுகின்றன என்பதை பல ஆண்டுகள் அனுபவத்தில் உணர்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார் மருத்துவர் திருத்தணிகாசலம்.
இலைதானே என்று ஏளனமாய் எண்ணாமல், யாவரும் படித்துப் பயன் பெறலாம்.
********
ஆசிரியர்: மருத்துவர் திருத்தணிகாசலம்
ஆப்பிள் புக்ஸ் பதிப்பகம்
பக்கங்கள்: 126
விலை: ரூ. 76/-