பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராவைக் கட்டாயமாக்கலாம்!

– உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, “பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம்.

அனைத்துப் பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் இந்த மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

You might also like