தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தென் கொரியாவில் ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், கப்பல் கட்டும் திட்டத்தை செயல்படுத்த ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவனத்திற்கு உரிய வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா வாக்குறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளதாகவும், சர்வதேச முதலீட்டை ஈர்த்து, தொழில்துறையை முன்னேற்றுவதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு தென்கொரியாவுக்கு அமைச்சர் கீர்த்தனா ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
– வைஷ்ணவி பாலு