அண்டனூர் சுரா – கவிஞர், எழுத்தாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வருகிறார்.
குறுநாவல், சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதி பாராட்டும் பரிசும் பெற்று வரும் எழுத்தாளர் அண்டனூர் சுராவின் முதல் நாவல் ‘முத்தன் பள்ளம்’.
எழுத்தாளர் அண்டனூர் சுரா ஓர் ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணியப் பார்வையில் பெண்களே எழுதத் தயங்கும் ஒரு நாவலை எழுதியுள்ளார்.
பெருத்த கொங்கையை வெறித்துப் பார்க்கும் ஆண்களைக் குறி வைத்து தாக்கியுள்ளார். பெரிய கொங்கையுடன் பெண்கள் படும்பாட்டை நாவலாக்கியுள்ளார்.
அவரின் துணிச்சலான முடிவே கொங்கை என்னும் இந்நாவல். அவர் எழுத்துப் பயணத்தில் கொங்கை ஒரு முக்கிய பதிவு.