தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டும் ரீஸ் டாப்லே 1 விக்கெட்டும் விழ்த்தினார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த அணியாக ஏற்கனவே முத்திரை பதித்திருந்த ஹைதராபாத் அணி, தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.

இதனையடுத்து கடினமான இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டுபிளிசியும் – விராட் கோலியும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது. 20 பந்தில் 42 ரன்கள் குவித்து விராட் கோலி ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வில் ஜேக் 7 ரன்களிலும், பட்டிதார் 9 ரன்களிலும், சவுரவ் சவுகான் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 28 பந்துகள் சந்தித்து 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பாக அந்த வெற்றிக்காக போராடினார். 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் 19வது ஓவரில் ஆட்டமிழந்தார்.1

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

You might also like