கடந்த முறை வென்ற இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. சந்திரசேகர ராவுக்கு, இந்த தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம். ஜுன் மாதம் 4-ம் தேதி ஓட்டு எண்ணும் வரை, அங்குள்ள மக்கள் போல் நாமும் காத்திருப்போம்.
முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி ஆட்சியில் கடன் தள்ளுபடியால் ஆதாயம் அடைந்த பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து 16 லட்சம் கோடியை மீட்டு அதனை 90 சதவிகித இந்தியர்களுக்கு திருப்பி தருவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதியளித்தார்.
‘அமேதியில் ராபர்ட் வதேராவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என அந்த தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ’இது, எதிரிகளின் சதி வேலை’ என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
வேட்பு மனுவை வாபஸ் வாங்கும் கடைசி நாளில், சூரத் தொகுதியில் மனு தாக்கல் செய்திருந்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 8 பேரும் தங்கள் மனுவை திரும்பப் பெற்றனர். இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ், போட்டி இல்லாமல் தேர்வு…