Browsing Category
கவிதைகள்
பாதை எதுவென்று தெரியாமல் பயணிக்கிறோம்!
படித்ததில் ரசித்தது :
எத்தனை வகையான பாதைகள்;
ஆனால் ஒரே ஒரு பாதை மட்டும் காணோம்;
இதயத்திற்கு போகும் பாதை;
அதனால் தான் மனிதன் இன்னும்
ஊர் போய் சேரவில்லை!
- அப்துல் ரகுமான்
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
படித்ததில் ரசித்தது:
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?
பூமியில் காலூன்றி நிற்கும்போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்
அந்த யோசனையை நான் ஏற்கவில்லை…
என்ன தான் சொல்கிறது கடல்?
என்ன துன்பமோ
கடலின் அலைகளுக்கு
வெளியே தெரியாமல் வருகின்றன;
கரையை நெருங்கும் பொழுது
ஆத்திரத்தோடு எழுகின்றன;
ஆனால் அலைகளை
தன் பக்கம்
இழுத்துக் கொள்கிறது கடல்;
போகாதே என்கிறதா?
செல்லாதே என்கிறதா?
இரண்டுமா?
என்ன சொல்கிறது கடல்!
-…
பெரியார்: இலையுதிர் காலத்தில் உருவான வசந்தம்!
கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய பல பாடல் வரிகள் திராவிட இனத்தையும், தமிழனையும் வரலாற்று வரிகளால் பெருமைப்படுத்தி இருக்கிறது.
இன்றும் அந்த பாடல்கள் உயிரோட்டமுள்ள பாடல்களாக உலா வந்து கொண்டிருப்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
அரசு நடத்திய…
சூரியன் கருக்குமா?
இமயம் முதல் குமரி வரை
எந்த ஒரு ஊரிலும்,
கைத்தடியுடன் நடக்கும்
காந்திமகான் சிலை இருக்கும்..
தேசத்தின் தந்தை எனத்
திக்கெட்டும் ஒலித்திருக்கும்.
கடையனையும் கடைத்தேற்றும்
கருணை ஜொலித்திருக்கும்..
அகிம்சை கொடிபறக்கும்.
அன்பினால்…
தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும்…!
படித்ததில் ரசித்தது:
இருட்டு...
தனி ஆத்மாவின் ஒரே நண்பன்!
இது உங்களுக்குப் பிடிக்காது.
வெளிச்சம் இல்லாமல்
'முன்னேற முடியாது' என்பீர்கள்.
'பின் வாங்கவும் முடியாது'
என்று நான் சொல்கிறேன்.
என்னால் வளரமுடியாவிட்டாலும்
தேய்ந்துபோகாமல்…
பிரான்சிஸ் கிருபா: அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தில் வாழ்ந்தவர்!
- கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்
பிரான்சிஸ் கிருபா மிகுந்த துயர வாழ்க்கையில் இருந்தார், வாழ்க்கை அவருக்கு ஒரு அம்புப் படுக்கையாக இருந்தது, மதுப்பழக்கத்தில் அடிமையானார் - போன்றவற்றின் வெளிச்சத்தில் கிருபா கவிதைகளை எல்லோரும் எடை…
எண்ணங்களை செயலாக்குவதே வெற்றி!
தாய் சிலேட்:
வெற்றியின் அடிப்படை
எடுத்த செயலில்
நிலையாக நிற்பதே.
எண்ணங்களை செயலாக்கும்
ஆற்றலே வெற்றியாக வளர்கிறது.
- வால்டேர்
வள்ளலாரை வாசிக்க வேண்டிய தருணம் இது!
கவிஞர் யுகபாரதியின் பதிவு
நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், வள்ளலாரின் ’இது நல்ல தருணம்’ பாடலைப் புதுவிதமாகப் பாடிக் காண்பித்தார்.
அப்பதிகத்திலுள்ள ’மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது / வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது’…
மரங்கள் – மண் கொடுத்த பரிசு!
மானுட ஆண்மைக்கு
மண் கொடுத்த சீதனங்கள்
மரங்கள்
நாங்கள்
சிறகுத் துடுப்புகள்
செலுத்திச் செல்கிற
படகுப் பறவைகளின்
பயணியர் விடுதிகள்
எந்தப் பறவைக்கும்
இருக்க இடங்கொடுக்கும்
பொதுவுடைமை வீடுகள்
அதனால்தான்…
தராதரம் அறியாத
தான்தோன்றிப் பறவைகள்…