எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பான கேள்வி!

செய்தி:

தமிழகத்தில் அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களால் மக்கள் அச்சம். சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?

– எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

கோவிந்த் கமெண்ட்:

ஒரு வழியாக தவெக ஆட்சி அமைத்தபோது, 6 மாத கால அவகாசம் கொடுத்தீர்கள், அதுவரை காத்திருப்போம் என்று.

இப்போது சட்டமன்றத்திலும் சமூக வலைத்தளங்களிலும் மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே கூரான விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். அதெல்லாம் சரிதான்.

அதேசமயம் திமுக ஆட்சிக் காலத்தில் மடப்புரத்தில் நடந்த அஜீத்குமார் கொலை வழக்கு சமயத்திலெல்லாம் இதேமாதிரி கேள்வியை நீங்கள் எழுப்பியிருக்கலாம்தானே!

You might also like