செய்தி:
ஆம் ஆத்மியிலிருந்து ஏழு எம்பிக்கள் இணைந்ததால், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு.
என்டிஏ கூட்டணிக்கு விடைக்கொடுத்த அந்த ஏழு எம்பிக்களையும் வரவேற்கிறேன்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.
கோவிந்த் கமெண்ட்:
பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமான மோதல் நடப்பது, ஒரு தொடர்கதையைப் போல ஆகிவிட்டது.
அதனுடைய ஒரு பகுதியாகத்தான் தற்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களைவை எம்பிக்களை ஒரே நேரத்தில் பாஜக தன் பக்கம் இழுத்து, மாநிலங்களவையில் தன்னுடைய எண்ணிக்கையைக் கூட்டியிருக்கிறது.
அதற்கேற்ப தங்களிடம் வந்து சேர்ந்த ஆம் ஆத்மி எம்பிக்களை பாஜக வெகுவாக வரவேற்றிருக்கிறது.
இதெல்லாம் இப்படி 7 எம்பிக்கள் சேர்வதெல்லாம் ஏதோ பாஜகவின் மீதான ஈர்ப்பின் காரணமாக மட்டும்தான், இது நடந்தேறியிருக்கிறதா என்பதை அதை வரவேற்றிருக்கிற பாஜக தான் விளக்க வேண்டும்.