தமிழர் வாழ்வியலையும் பண்பாட்டையும் உணர்வோம்!

நூல் அறிமுகம்:
 
“தமிழ்ப் பேராசிரியர் அ.தட்சிணாமூர்த்தி எழுதிய ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்கிற இந்த அரிய நூல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படிச் சிறப்புற்று இருந்தன என்பதை உணர்ச்சிவசப்படாமல், இலக்கிய, தொல்லியல் ரீதியாக அழகாக விவரிக்கிறது.
 
தொன்மைக் காலம் முதல் அண்மைக் காலம் வரை தமிழரின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஓரளவு முழுமையாக உணர்தற்கு ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ நூல் உதவுமென்பதில் ஐயமில்லை.  
 
இந்நூலாசிரியர் திரு.அ.தட்சிணாமூர்த்தி அவர்களின் புலமையும் பெருமுயற்சியையும் பெரிதும் பாராட்டுகிறேன்.”
 
– பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி
 
******
 
“இந்நூல் தமிழ்நாட்டு அறிஞர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும், தமிழைச் சிறப்பாக பயிலும் இளங்கலை, முதுகலை வகுப்பு மாணவர்களுக்கும் தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வு எழுதுவோருக்கும் சிறந்த முறையில் பயன்படும் என நம்புகிறேன்”.
 
– பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்.
 
******
 
நூல்: தமிழர் நாகரிகமும் பண்பாடும்!
ஆசிரியர்: டாக்டர் அ.தட்சிணாமூர்த்தி
யாழ் வெளியீடு
பக்கங்கள் : 640
விலை: ரூ.600/-
You might also like