கர்நாடக துப்பாக்கிச்சூடு: சட்டசபையில் சலசலப்பு!

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

திமுக, அதிமுக, பாமக, விசிக, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சம்பவம் குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

திமுக சார்பில் பேசிய மனோஜ் பாண்டியன், இது மனித உரிமை மீறல் எனக் கூறி, வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சம்பவத்தில் சதி இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணை கோரினார்.

சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதிலளிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நீதி விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

அமைச்சரின் பேச்சில் இடம்பெற்ற சில கருத்துகளுக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தேவையற்ற கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார்.

– வைஷ்ணவி பாலு

You might also like