நூல் அறிமுகம் :
மனத்தைப் புரிந்துகொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும் யார்தான் விரும்ப மாட்டார்கள்?
ஏனெனில், மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர்.
ஆனால், தங்களுடைய மனத்தை வெற்றி கொண்டுள்ள அறிவார்ந்த நபர்கள் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அபரிமிதமாகக் கைவசப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அத்தகையோர் வெகுசிலரே உள்ளனர்.
தங்களுடைய மனங்களை வெற்றி கொண்டுள்ளோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதன் மூலமாக இவ்வுலகில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கைவசப்படுத்தியுள்ளோரின் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீப் திரிவேதி இந்நூலை எழுதியுள்ளார்.
மனம் ஓர் எளிய விதியைப் பின்பற்றுகிறது: ‘மனம் உங்களை வெற்றி கொண்டுள்ளது என்றால், அது உங்கள் வாழ்வில் பேரழிவுகளை ஏற்படுத்தும்.
நீங்கள் உங்கள் மனத்தின் எஜமானாக ஆனால், அதே மனம் ஓர் அசாதாரணமான சக்தி மையமாக மாறும்.’
இப்புத்தகத்தில் கையாளப்பட்டுள்ள தலைப்புகளில் இவையும் அடங்கும்:
• மனத்திற்கும் மூளைக்கும் இடையேயான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்
• மனத்தின் பல்வேறு நிலைகள்
• மனத்தின் அதிகார மையங்கள்
• வெற்றிக்கான திறவுகோல்கள்
• மேதமைக்கும் அறிவாற்றலுக்கும் இடையேயான வேறுபாடுகள்
******
நூல் : நான் மனம் பேசுகிறேன்!
ஆசிரியர்: தீப் திரிவேதி
மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
பக்கங்கள்: 342
விலை: ரூ.379/-
மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
பக்கங்கள்: 342
விலை: ரூ.379/-