முதல் முறையாக வாக்களித்த பழங்குடியினர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் வாக்களித்துள்ளனர்.

வெளியுலகத்துடன் எவ்வித தொடர்புமின்றி வாழும் இந்த பழங்குடியின மக்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் வாக்களிக்க உரிய பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாக்களித்த பழங்குடியின மக்கள், அங்கிருந்த செல்ஃபி பூத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஆர்.சொக்கலிங்கம் முகநுல் பதிவு

You might also like