மன்சூர் அலிகானுக்கு என்னாச்சு?

வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பலாப்பழச் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான்.

தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு முடிவடைந்த நிலையில், அவர் நேற்று காலை முதல் ஆம்பூர் – வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அப்போது குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மன்சூர் அலிகான் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாலை 6 மணி அளவில் மன்சூர் அலிகான் மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

‌‌இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தற்போது அறிக்கையொன்று விடுத்துள்ளார்.

அதில், நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி. பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க. சிகிச்சை குடுத்தும் வலி குறையவில்லை.

வலி தொடர்ந்து அதிகமாக, சென்னைக்கு கே.எம்.நர்ஸிங் ஹோம்க்கு ஆம்புலன்ஸ்ல் கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூவில் அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக டிரிப்ஸ் குடுத்தார்கள். இன்று பிற்பகலுக்குப் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது.

மன்சூர் அலிகான் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like