நெல்லையில் வளரும் ஓவியர்!

- கவிஞர் மனுஷ்யபுத்திரன்

இந்தப் படத்தை வரைந்த 16 வயதாகும் 11-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் விஷ்ணுவை திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் சந்தித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்.

இந்தப் படத்தை எனக்கே பரிசளிக்கவேண்டும் என தம்பி விஷ்ணு தன் தாயார் பிரேமலதாவுடன் இன்று சென்னையில் நூலக ஆணைக்குழு அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.

மிக இளம் வயதில் இத்தகைய திறமைவாய்ந்தவர்களை கண்டறிவதும் அவர்களுக்கான உற்சாகத்தையும் ஆதரவையும் தருவது மிகவும் முக்கியம்.

அடுத்த ஆண்டு சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயிலும்படி கூறி தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக கூறினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

நன்றி: கவிஞர் மனுஷ்யபுத்திரன் முகநூல் பதிவு

You might also like