டெல்லியை அதிர வைத்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி!

நாட்டின் 75-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்.

சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இதனிடையே, குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக முடிந்துள்ள நிலையில், முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் கலந்துகொண்டு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

அதன்பின், பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றியதைத் தொடர்ந்து முப்படை வீரர்கள் உள்ளிட்ட பிரிவினர் பாசறை திரும்பினர்.

You might also like