எம்.ஜி.ஆரிடம் வாலி செய்த குறும்பு!

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சமயம் எம்.ஜி.ஆரும் வாலியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வாலி, “எனக்கு இந்தப் படத்தில் எத்தனை பாடல்கள்?” என்று கேட்க, அதற்கு எம்.ஜி.ஆர்., “உமக்கு இந்தப் படத்தில் பாடல் இல்லையே” என்றுக் கூறியுள்ளார்.

அதைக்கேட்ட வாலி, “அதெப்படி நான் இல்லாமல் இந்தப் படம் எப்படி வெளிவரும் என பார்க்கலாம்..” என்று சொல்லவும் எம்.ஜி.ஆர். புருவத்தை உயர்த்தினார்.

உடனே வாலி, ”நான் இல்லாவிட்டால் படம் உலகம் சுற்றும் பன் என்றுதானே இருக்கும்” என்று சொல்ல, அவரது சாதுர்யத்தை அறிந்து எம்.ஜி.ஆர் வாய்விட்டு சிரித்தார். அத்துடன் பாடல்கள் எழுதும் வாய்ப்பையும் வாலிக்கு வழங்கியுள்ளார்.

– நன்றி: சமநீதி 

You might also like