முன்னணி நடிகர்களை பின்னுக்குத் தள்ளும் அல்லு அர்ஜுன்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இப்படியான நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் அல்லு அர்ஜுனுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுவும் இந்தப் படத்தை தளபதி விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

ஆனால், இது பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, இந்தப் படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜுனுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27.01.2022 12 : 30 P.M

You might also like