காகிதத்தில் ஒரு கோடு!

ஆத்மாநாமின் கவிதை

*

பெங்களூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படும் மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆத்மாநாமின் முதல் கவிதைத் தொகுப்பு 1981-ல் வெளியாயிற்று. அதிலிருந்து ஒரு கவிதை.

தலைப்பு : ’காகிதத்தில் ஒரு கோடு’

*

சொன்னால் மறுக்கிறார்கள்

எழுதினால் நிராகரிக்கிறார்கள்

தாக்கினால் தாங்குகிறார்கள்

சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்

அற்புத உலகம்

அற்புத ‘மாக்கள்’!

*

19.12.2021   12 : 10 P.M

You might also like