வாசிப்பின் ருசி :
“காரும், வீடும், பணமும் இருந்தா அது நல்ல வாழ்க்கையா தம்பி? இல்லவே இல்லை… உறவுகள் வேண்டும், அடுத்தவனுக்கு ஒரு துன்பம்னா ஆதங்கப்படுற உணர்ச்சி வேணும்.”
- எழுத்தாளர் பரிவை சே.குமார் எழுதிய ‘அறுகு’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலில் ‘பொய்க்கால் குதிரைகள்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற சிறுகதையிலிருந்து ஒரு பகுதி.
(நவீன உலகில் வசதிகள் பெருகிவிட்டாலும், தொலைந்து போகும் மனித உணர்வுகளையும் உறவுகளின் மேன்மையையும் நெஞ்சைத் தொடும் விதமாக அமைந்துள்ளது இந்த சிறுகதை).