செய்தி:
கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை கடற்கரையை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்த அண்ணாமலை!
– மக்கள் பணியும், இயற்கையைப் பாதுகாப்பதும் முக்கியம் என அண்ணாமலை கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கண்மாய், ஏரிகளில் நிறைந்திருக்கிற சீமைக் கருவேலமரங்களை வெட்டிச் சாய்த்து சுத்தப்படுத்தும் வேலையில் இருக்கிறார்.
இப்போது அதே பாணியில் அண்ணாமலையும் களத்தில் இறங்கி முதலில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சுத்தப்படுத்த வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதனால், வைகோவும், அண்ணாமலையும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கலாம்.