செய்தி:
ஹெல்மெட் அணியாத ஏட்டுக்கு நூதன தண்டனை!
– டிஐஜி திருநாவுக்கரசு உத்தரவால் நெகிழ்ச்சி.
கோவிந்த் கமெண்ட்:
ஹெல்மெட் போடுவதை வலியுறுத்த வேண்டிய காவலரே அதை மீறிய நிலையில், டிஐஜி ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சென்று பார்க்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்.
இது நல்லதொரு செயல்தான்.
ஆனால், தினமும் ஹெல்மெட் அணியாத அனைவருக்கும் இப்படி ஒரு தண்டனை கொடுத்தால் மருத்துவமனையில் எவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்துவிடும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.