சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு ஆபத்து!

சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு மெய்யான மரண ஆபத்தாகும்.

தார்மீக விளைவுகளை ஒதுக்கிவிடுங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (கருத்துச் சுதந்திரத்தால்) எழும் துன்பங்களை அனுபவிக்காமல், கருத்துச் சுதந்திரத்தின் பலன்களையும் அனுபவிக்க முடியாது… (அது) மக்களின் ஆன்ம விருப்பங்களைக் காட்டும் ஒரு விழிக்கண்ணாகும், மக்களின் நம்பிக்கைகளை அது தன்னகத்தே கொண்டிருக்கிறது.

தனி மனிதர்களை அரசுடனும், உலகத்துடனும் இணைக்கும் ஒரு இனிய இணைப்பாகவும், களத்தில் நடக்கும் போராட்டங்களை கருத்துப் போராட்டங்களாக்கி, போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான கருதுகோள்களைப் படைப்பதாகவும் உள்ளது…

ஒரு நாடு கருத்துச் சுதந்திரத்தை சட்ட விரோதமென்று கட்டுப்படுத்தினால், சட்ட விரோதத்தை சட்ட வழக்கமாக்கிடுகிறது.

  • ரைனிஸ் ஜெடுங், மே 15, 1842.

– (கார்ல் மார்க்ஸ் ரைனிஸ் ஜெடுங் என்ற இதழின் ஆசிரியராக செயல்பட்ட காலத்தில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி)

You might also like