ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையொட்டி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார்.

இதேபோல், நடிகர் அஜித்குமார் காலை 6.40 மணிக்கே சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து, காலை 7 மணிக்கு முதல் ஆளாக தனது வாக்கினைப் பதிவு செய்தார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் சென்று தனது வாக்கை செலுத்தினார்.

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ், மதுரை புதுதாமரைப்பட்டி வாக்குசாவடியில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதேபோல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குசாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் காலையிலேயே தனது மனைவியுடன் சென்று வாக்குப்பதிவு செய்தார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் வெற்றிமாறன், கீழ்பாக்கத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய்சேதுபதி உள்ள்ளிட்ட திரைபிரபலங்களும் வாக்கு செலுத்தினர்.

#அஜித் #விஜய் #ரஜினி #கமல் #மக்களவைத்_தேர்தல் #TN_actors_Cast_Vote_In_Lok_Sabha_Polls #TN_actors #Lok_Sabha_election #rajini #ajith #vijay #kamal

You might also like