பொன்மனச் செம்மலைப் போற்றுவோம்!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனமான பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 36-வது நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பொன்மனச் செம்மலின் சிலைகளுக்கும், அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரை நினைவு கூர்ந்தனர்.

அதன்   தொடர்ச்சியாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் வழக்கறிஞர், முனைவர் குமார் ராஜேந்திரன், அவரது தங்கை மருத்துவர் செல்வி ராஜேந்திரன், சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லப் பராமரிப்பாளர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

முன்னதாக தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கும், இதேபோல், அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

You might also like