வாசன் – சலியாத உழைப்பு!

பரண் : 

‘’திரு.வாசன் வாரப்பத்திரிகைகளும் சரி, தமிழ் சினிமா உலகமும் சரி, காலம் சென்ற வாசன் அவர்களை நன்றியோடு நினையாமல் இருக்க முடியாது.

இரு துறைகளிலும் அவர் ஒரு முன்னோடி. வழிகாட்டி. கட்டுக்கடங்காத உற்சாகம்; அந்த உற்சாகத்தைச் சாதனையாக உருவாக்கத் தெரிந்த ஆற்றல்; புத்திக்கூர்மையுடன் திட்டம் வகுத்துச் செயலாற்றினால் எந்தத் துறையிலும் உச்சிக்கு ஏறிவிட முடியும் என்ற உரம்; உரத்துக்குத் துணை நின்ற சலியாத உழைப்பு.

‘வாசன்’ என்கிற வார்த்தையில் இவை எல்லாம் அடங்கியிருந்தன.
வாழ்க அவர் நினைவு!’’

– 11.9.1969 குமுதம் இதழில் தலையங்கத்தை ஒட்டி எஸ் எஸ்.வாசன் மறைவுக்கு எழுதப் பட்டிருந்த எளிய அஞ்சலிக் குறிப்பு.

You might also like