சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் தயார்!

– வெளியுறவுத் துறை தகவல்

ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு சி-130ஜே ரக விமானங்களும், சூடான் துறைமுகத்தில் ஐ.என்.எஸ். சுமேதா கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மீட்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளுடனும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, அமெரிக்காவுடனும், இந்தியத் தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

You might also like