செய்தி:
சென்னை, தியாகராய நகரில் சாலையில் கிடந்த 45 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த பெண் தூய்மைப்பணியாளர் பத்மாவின் நேர்மைக்குக் குவியும் பாராட்டு.
கோவிந்த் கமெண்ட்:
தெருவில் இறங்கி தங்களது நியாயமான கோரிக்கைக்காக சிறைப்பட்டு, வதைப்பட்டு போராட்டம் நடத்திய நிலையிலும், பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் எவ்வளவு மனத்தூய்மையுடன் தூய்மைப்பணியாளர்களின் சார்பிலான பிரதிநிதியாக இருக்கிறார் பத்மா.
வள்ளுவர் சொன்ன ‘அகத்தூய்மை’ என்பது இதுதான்.