செய்தி:
மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கிறார்.
கோவிந்த் கமெண்ட்:
உலக நாயகன், ஆஸ்கர் நாயகன் என்றெல்லாம் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட கமல்ஹாசனை இனி நாடாளுமன்ற நாயகன் என்றும் அவரது ரசிகர்கள் அழைக்கலாம்!
மாநிலங்களவையில் அவர் எழுப்ப இருக்கும் உரைக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.