இலக்கியம் என்னவென்று கேட்டால், அது வாழ்க்கையைப் பாதிக்கும் சக்திகளில் ஒன்று. நம் மீது செல்வாக்கு செலுத்த முடிகிற ஏதோ ஒரு சக்தி. கட்டுப்படுத்துகிற ஒன்று என்றே சொல்லலாம்.
சமூகத்தை மதம் கட்டுப்படுத்துவதுபோல, நீதி – சட்டத்தைப்போல… மனிதர்களாகிய நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தவும் கட்டுப்படுத்தவும் செய்கிற ஒரு சக்திதான் இலக்கியம்.
அனைவரின் வாழ்க்கையிலும் இந்த சக்தி தெரிந்தோ தெரியாமலோ செல்வாக்கு செலுத்துகிறது. கல்வியறிவு ஏதுமற்ற எளிய கிராமியர் அறியாமல் முனகும் வரிகள் உண்டல்லவா, அவர்களெல்லாம் சொல்கிற பழமொழிகள் போன்ற பேச்சுகள் உண்டல்லவா… அவையெல்லாம் இந்த செல்வாக்கு.
இலக்கியம் – அது கவிதையோ கதையோ, சொல்லோ எதுவாகவும் இருக்கட்டும். நமது தொன்மையான கதையும் இதைத்தான் சொல்கிறது.
– மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன்