சிவாஜியோடு ஜோடி சேர்ந்தது பாக்கியம்!

– நடிகை மனோரமா நெகிழ்ச்சி

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் சிவாஜியோடு மனோரமா நடித்திருந்தாலும், அவரோடு ஜோடியாக நடித்தது ‘ஞானப் பறவை’ என்ற திரைப்படத்தில் தான்.

அந்த வாய்ப்பு கிடைத்தபோது மனம் நெகிழ்ந்து போய் மனோரமா சொன்னார். “அவரோடு நூறு படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால், ஜோடியாக நடிப்பது இது தான் முதல் தடவை. அவர் கால் தூசி பெறுவேனா நான்? இப்படி ஒரு பாக்கியம் வரும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை’’

அந்தப் படத்தில் மனோரமா உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய ஒரு டயலாக்.

“எல்லோரும் கணவனைத் தெய்வம்னு சொல்வாங்க.. எனக்குத் தெய்வமே கணவனா வந்திருக்கு..’’

You might also like