உன்னுடன் யாரையும் ஒப்பிடாதே…!

 – ஓஷோவின் வார்த்தைகள்

இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது.
நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய். நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக் கூடியவர் யாருமில்லை.

வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒரு வாய்ப்புதான், ஒரு வாசல்தான்.

வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல,மனித மனங்களைத் தவிர.

ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம், ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான்-உனது விழிப்புணர்வு.

வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள். வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.

வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்து விட்டால், இந்த வாழ்வின் முழு ரகசியமும் உனக்கு தெரிந்து விடும்.

கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்க முடிந்ததைப் பகிர்ந்து கொள்.
அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது.

உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாகப் பார். நீ ஆழமாகப் பார்க்கப் பார்க்க அவை சிறிதாகத் தெரியும்.

இந்தக் கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிட முடியும். ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.

தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படக்கூடிய ஆற்றல் இருக்கிறது.

ஒவ்வொரு எண்ணமும் விடப்பட வேண்டும். அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.

எல்லா பயங்களுடனும் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும், ஆனால் திரும்பத் திரும்ப அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டால் மெதுமெதுவாக அந்த பயம் மறைந்து விடும்.

நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல. நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை.

ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்து விடுகிறது.

உனது உடல் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி.

You might also like