குழந்தையின் காய்ச்சலுக்கு குடும்பமே துவண்டு விடுகிறது!

– ரசனைக்கு சில வரிகள்

1. அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், ‘எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்!

2. சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்!

3. சாமி கும்பிடும்போது முகத்தை சீரியஸா வெச்சிக்க ட்ரை பண்ணுதுங்களே… அப்ப குழந்தைகள் அழகோ அழகு.

4. ராத்திரி முழுக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. ஆனா, காலையில எந்த பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது!

5. அர்த்த ராத்திரியில் தெர்மக்கோல் நறுக்கிக் கொண்டிருக்கிறேன். பெற்றோரை டிசைன் டிசைனாக டார்ச்சர் செய்வது பற்றி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நன்கு அறியும்!

6. வேறு எந்தக் கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வது, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்!

7. ‘இல்லை’ என்பதைவிட ‘இருந்தது’ என்பது வலிமிக்கது!

9. சண்டைக்கு அப்புறம் மனைவி என்ன சொல்லியும் சமாதானம் ஆகலைன்னா, உடனே சமையலறைக்குள்ள போயி, எல்லா பாட்டில்களோட மூடிகளையும் இறுக்க மூடிவிட்டுத் தூங்கிவிடுங்கள்!

10. நாம் கழுவி வைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்!

11. ‘இந்தா’ என குழந்தை இரண்டு கைகளையும் நீட்டி தன்னையே தருகிறது!

12. அன்னக் கரண்டியை கைபோலவே வடிவமைத்தவரின் ரசனையை எண்ணி வியக்கிறேன்!

13. ஒரு நாளைக்கு அஞ்சு டிரெஸ் போட, பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; குழந்தையாக இருந்தாலே போதும்!

14. கடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்!

15. டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்… ஓ.கே-யா? நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா? #மகளதிகாரம்!

16. ‘ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன!

17. கணவனை ஒரு சின்ன வேலை செய்யவைக்க எளிய வழி… அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே.

18. குழந்தையைத் தூங்க வைக்கிறது இருக்கே… கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, ‘நீ யார்றா கோமாளி?’னு பார்க்கும்!

19. டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

20. எல்லாம் தெரிந்த பரமாத்மாவுக்கே தெரியாதது ஒன்று உண்டு என்றால், அது… இலையில் ஊற்றிய ரசம் எந்தப் பக்கம் செல்லும் என்பதுதான்!

21. குழந்தையின் காய்ச்சலுக்கு, குடும்பமே துவண்டுவிடுகிறது!

22. கழுதைகிட்ட 100 ரூபா நோட்டைக் கொடுத்தா, அப்படியே சாப்பிட்டுடும். அதுக்குத் தெரியாது அதுல மூணு கொயர் பேப்பர் வாங்கிச் சாப்பிடலாம்னு!

23. வேலை பிடிக்கலைன்னா உடனே வேலையைவிடுற தைரியம்தான்… பொருளாதாரச் சுதந்திரம்!

24. ‘அதை எடுத்துட்டு வா’னு அப்பா சொல்ல, ‘எது?’னு அம்மாவுக்கு மட்டும் புரியும் ரகசியம்தான் காதல்.

25. ஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.

26. பொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.

– நன்றி: முகநூல் பதிவு.

You might also like