Browsing Category

சினிமா

தனுஷ்-50: இன்னொரு அக்னி நட்சத்திரமா?!

‘அவரைப் போல இவர் இருக்கிறார்’, ‘அவரின் சாயல் சில இடங்களில் இவரிடம் தென்படுகிறது’, ‘சில விஷயங்களில் அவருக்கும் இவருக்கும் ஒற்றுமை உண்டு’ என்று இரு வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நடிப்புக்கலைஞர்களை ஒப்பிடுவது தமிழ் சினிமா ரசிகர்களின் வழக்கம்.…

ரணம்: முக்கால் கிணறு தாண்டினால் போதுமா?

காமெடிப் படங்கள், பேய்ப் படங்கள் போன்று ‘த்ரில்லர்’ படங்கள் பார்ப்பதை ஒரு ட்ரெண்டாக கொள்வது கடினம். காரணம், திரைக்கதை நேர்த்தி கொஞ்சம் பிசகினாலும் அது தரும் மொத்தக் காட்சியனுபவமும் தன்னிலை திரிந்துவிடும். ஆனாலும், அந்த வகைமையில்…

பைரி – வசீகரிக்கிறதா இந்த நாஞ்சில் வட்டாரக் கதை?

விளையாட்டுகளை மையப்படுத்திப் பல திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. தமிழில் கூட கபடி, கிரிக்கெட் போன்றவற்றை முன்னிறுத்திய படங்களுக்கு நடுவே சேவல் சண்டை, ஜல்லிக்கட்டை மையப்படுத்திச் சில படங்கள் வெளியாகின்றன. அந்த வகைமையில் மகுடம்…

மஞ்சும்மள் பாய்ஸ் – மனம் பதைபதைக்கச் செய்யும் ‘த்ரில்லர்’!

குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும். அப்பாடல் காட்சியில் இடம்பெற்ற கமல், ரோஷிணியின் நடிப்பும், பின்னணியில் பயமுறுத்தும் பாறைகள் நிரம்பிய அந்தக் குகையும் உங்கள் மனதை நிறைத்திருக்கும்…

ஊரு பேரு பைரவகோனா – பயமுறுத்துகிற ‘பேண்டஸி’ கதையா இது?

சந்தீப் கிஷன். ‘யாருடா மகேஷ்’ மூலமாகத் தமிழில் அறிமுகமாகி ‘மாநகரம்’, ‘மாயவன்’ படங்கள் வழியே நம் கவனம் ஈர்த்தவர். தெலுங்கில் தொடர்ந்து இவர் வெற்றிப் படங்கள் தந்துவரும் ஒரு நடிகர். கடந்த ஆண்டு வெளியான ‘மைக்கேல்’ படத்தில் காதலிலும் ஆக்‌ஷனிலும்…

சிவகார்த்திகேயன் என்ன இப்படி இறங்கிட்டாரு..!!

குழந்தைகள், பெண்கள், பெரியோர்களுக்குப் பிடித்தமான தமிழ் சினிமா நட்சத்திரமாகத் திகழ்வது மிகப்பெரிய சவால். அந்த வரவேற்பைத் தக்க வைப்பதற்கு நிறையவே மெனக்கெட வேண்டும். ஒவ்வொரு படத்தின் உள்ளடக்கத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்க வேண்டும்.…

பிரமயுகம் – நூற்றாண்டுகளாகத் தொடரும் கதை!

ஒவ்வொரு திரைக்கதையும் ஒரு உலகத்தைக் காட்டும். அது, முழுக்க முழுக்க அப்படத்தின் கதாசிரியரும் இயக்குனரும் இன்ன பிற கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கும் உலகமது. திரையில் படம் ஓடத் தொடங்கியவுடன் அதனுள் நுழையும் நாம், சில நேரங்களில் அது…

சைரன் 108 – ’ஜெயம் ரவி’க்கு மீண்டும் வெற்றி!?

’தனி ஒருவன்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ இரண்டும் கலந்தது போன்று ‘சைரன் 108’ படம் இருக்கும். இதனைச் சொன்னவர் நடிகர், இயக்குனர் அழகம் பெருமாள். ‘சைரன் 108’ படத்திற்கான முன்னோட்டத்தின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு…

மான்ஸ்டர் – நத்தையாக நகரும் திரைக்கதை!

உலக சினிமா என்று சொல்லப்படும் படங்களில் திரைமொழி தனித்துவமானதாக இருக்கும். கதையின் வேர் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கண்டறியும் முன்னரே திரைக்கதை முடிவு பெற்றுவிடும். அதன் பிறகு வீடு திரும்பும் வழியில், நாமாக மனதுக்குள் அந்தக் கதையை…

அன்வேஷிப்பின் கண்டதும் – ‘கிளாசிக்’ த்ரில்லர் அனுபவம்!

த்ரில்லர் படங்கள் புதிய ட்ரெண்டை உருவாக்கினாலும், அந்த அலையைப் பின்தொடர்ந்து பெருமளவில் திரைப்படங்கள் வெளியாகச் சாத்தியம் கிடையாது. ஏனென்றால், தொடக்கம் முதல் இறுதி வரை ‘த்ரில்’ குறையாமல் கதை சொல்வது மிக அரிதாகவே நிகழும் அல்லது அதற்காகக்…