இரைச்சலின் நடுவே அமைதியாக வாழக் கற்றுக்கொள்!

வாசிப்பின் ருசி:

இரைச்சலுக்கும்
அவசரத்திற்கும் நடுவே
அமைதியாகச் செல்;

மௌனத்தில் எவ்வளவு
அமைதி இருக்கக்கூடும்
என்பதை நினைவில் கொள்.

உன்னை நீ மற்றவர்களோடு
ஒப்பிட்டுப் பார்க்காதே,
அதனால்
நீ வீணானவனாகவும்
அல்லது கர்வமுள்ளவனாகவும்
மாறக்கூடும்.

உன் சாதனைகளையும்
திட்டங்களையும் போலவே
உன் அமைதியையும் ரசி!

– டெசிடெராட்டா

You might also like