செய்தி:
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளை வரவேற்கும் வகையில், நுழைவாயில் பகுதியில் நாய் வடிவிலான குட்டி ‘ரோபோ’ ஒன்று பயணிகளுக்குக் கை குலுக்கி வரவேற்று பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து வருகிறது.
கோவிந்த் கமெண்ட்:
பல பகுதிகளில் உயிருள்ள நாய்கள் விரட்டி விரட்டி மனிதர்களை செம்மையாய் கடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு பதிலீடாக இப்படி ஒரு செட்டப்பை ஏற்பாடு பண்ணி வாழ்த்துச் சொல்ல வைத்திருக்கிறார்கள்.
நல்லவேளை ‘ரோபோ’ நாய் குறைக்கவுமில்லை, கடிக்கவுமில்லை.
‘ரோபோ’க்கள் ‘ரோபோ’க்கள் தான்.