இலக்கியம் என்றதும் அது சராசரி மனிதர்களைப் போல இல்லாத அசாதாரணக் காவிய நாயகர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து ஏதோ ஒரு பழங்காலத்தில் இருந்திருக்கலாம்.
உண்மையில் இலக்கியம் என்பது தங்களுடைய சாதாரண வாழ்க்கையில் சாதாரண நிகழ்ச்சிகளின் சில தருணங்களில் எப்படி சராசரி மனிதர்கள் தங்களை அறியாமலேயே கூட காவிய நாயகர்களுக்குச் சமமானவர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துவது தான்.
அப்படி உணர்த்தும் எழுத்தாளர், எழுத்தாளர் அசோகமித்திரன் தான்.
– எழுத்தாளர் ஞாநி