இளம் இசையமைப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரைத்துறை!

தமிழ் ஈழ விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மேதகு’ 2021-ம் ஆண்டு கிட்டு இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரவீன் குமார். இப்படத்தைத் தொடர்ந்து ‘மேதகு 2’, ‘ராக்கதன்’, ‘கக்கன்’ உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரவீன் குமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் அங்கிருந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அண்மையில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், இன்று அதிகாலை மரணமடைந்தார். இன்று (02.05.2024) மாலை 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான தஞ்சையில்  அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

இசையால் பலரது பாராட்டுகளைப் பெற்ற பிரவீன் குமாரின் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

You might also like