தங்கவேலுவுக்கு அறிவுரை சொன்ன கலைவாணர்!

ஒருமுறை நடிகர்கள் எல்லாம் செட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரசிகர் கலைவாணர் என்எஸ்கே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம் ஆட்டோகிராப்பை புரட்டிப்பார்த்த என்எஸ்கே ஒரு இடத்தில் ‘சிந்திக்காதே- சிரித்துக் கொண்டே இரு’ என்று எழுதி கே.ஏ.தங்கவேலு அண்ணன் கையெழுத்து போட்டிருந்தாராம்.

உடனே அவரை என்எஸ்கே கூப்பிட்டு “டேய், சிந்திக்காமல் பைத்தியக்காரன் தான் சிரிப்பான். அதை அடித்துவிட்டு ‘சிரி – சிந்தி’ என்று எழுதிக்கொடு” என்று திருத்தம் செய்தாராம்.

—  ஹியூமர் கிளப் நிகழ்ச்சியில் எம்.என்.ராஜம் அம்மா பேசியது.

  • நன்றி : என்எஸ்கே நல்லதம்பி முகநூல் பதிவு

#NSK #ராஜம் #கலைவாணர் #தங்கவேலு #சிரி #சிந்தி #என்எஸ்கே #kalaivanar #mn_rajam #KA_thangavelu #எம்_என்_ராஜம்

You might also like