சுயமாகத் தொழில் தொடங்கச் சிறந்த இடம் தமிழ்நாடு!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை எம்.ஆர்.சி நகரில் உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், “தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதோடு, தொழில் தொடங்குவதற்கு சிறந்த இடம் என்ற இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் தொழில் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

You might also like